கடலூர், ஏப்.15- திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து கடலூர் மற்றும் வடலூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு:- நமது நாட்டை பாசிச சக்திகளிடம் இருந்து பாது காப்பதற்காக 25க்கும் அதிகமான கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைந்திருப்பதுதான் ‘இந்தியா கூட்டணி’. இந்த கூட்டணிக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட தாகும். 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து நிற்பவர்களுக்கு டெபாசிட் கிடைக்குமா என்பது தான் தற்போதைய நிலை. மவுன சாமியார் எடப்பாடி ! கொள்கை, லட்சியம் எதுவும் இல்லாமல் போட்டி யிடும் அதிமுக-தேமுதிக, பாஜக-பாமக கூட்டணி கட்சிகளின் நிலை‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதாகும். எதிர்க்கட்சி என்ற முறையில் தமது பிரச்சாரத்தில் திமுகவை விமர்சனம் செய்து வரும் எடப்பாடி பழனி சாமி, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நட வடிக்கைகளை, பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ஈரம் இல்லாத மோடி! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டு காலத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி, ரூ.5,000 கோடி நகை கடன் தள்ளுபடி, ரூ.2,200 கோடி மகளிர் சுய உதவி கடன் தள்ளுபடி செய்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு ஒன்றிய பாஜக அரசு நிவாரணமாக ஒரு ரூபாய் கூட நிதி தரவில்லை. இவ்வளவு ஏன்? பாதித்த மக்களுக்கு ஆறுதல் கூறக் கூட மோடி வரவில்லை. பாமகவின் நயவஞ்சகம்! நவ ரத்தினங்களில் ஒன்றாக திகழ்ந்து கொண்டி ருக்கும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. என்எல்சி நிறு வனத்தைப் பாதுகாப்பதற்கு மாறாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்எல்சி நிறுவனத்தை மூட வேண்டும் என்று குரல் கொடுத்தார். 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு திட்டம் கூட கொண்டுவரப்படவில்லை.
‘மதமெனும் பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும்’ என வள்ளலார் கூறியுள்ளார். அந்த பேய் பிடித்துள்ள பாஜகவை விரட்ட வேண்டும். வேற்றுமை யில் ஒற்றுமை காணும் தேசம் இந்தியா. அதில் மத வெறியை புகுத்தி வருகின்றனர். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார். கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பா ளர் தங்கர்பச்சான் மோடியை வைத்து நல்ல படம் வேண்டுமானால் எடுக்கலாம். ஆட்சி அமைக்க முடியாது என்றும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். வடலூர் கூட்டத்திற்கு கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் எம்.பி. தண்டபாணி தலைமை தாங்கினார். கடலூரில் மாநகர செயலாளர் ஆர். அமர்நாத் தலைமை தாங்கினார். இந்த கூட்டங் களில் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத், சட்ட மன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச் செல்வன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், எம். மருத வாணன், வி.சுப்புராயன், மாநகர செயலாளர் கே. எஸ்.ராஜா, காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர் திலகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.