districts

img

குகைய நல்லூரில் வீடுகளை இடிக்கும் வருவாய்த்துறை : வட்டாட்சியரிடம் சிபிஎம் புகார்

வேலூர், டிச.23 - வேலூர் மாவட்டத்தில் காட்பாடி  வட்டம், திருவலம் அடுத்த குகைய நல்லூர் ஏரிக்கரை பகுதியில் 25க்கும் மேற்பட்டோர் 40 ஆண்டு களாக வசித்து வருகின்றனர். அதே இடத்தில் ஊராட்சி மன்ற அலுவ லகம், கிராம நிர்வாக அலுவலகம், நியாய விலைக்கடை, நூலகமும் உள்து. நீர்நிலை புறம்போக்கில் வீடு களை கட்டி இருப்பதாக கூறிய வருவாய்த்துறை அதிகாரிகள், வீடுகளை காலி செய்து கொடுக்கு மாறு நோட்டீஸ் அனுப்பினர். பிறகு, மின்சார இணைப்பையும் துண்டித்தனர். இதையடுத்து காட்பாடி வட்டாட்சியரை சந்தித்து முறையிட்ட னர். அப்போது அனைவருக்கும் மாற்று இடம் தருவதாக கூறிய வட்டாட்சியர்,  இந்த மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புத்தூர் கிராமத்தில் ஊருக்கு ஒதுக் குபுறமாக ஒரு இடத்தில் பட்டா வழங்கினர். ஆனால் அந்த இடமும்  அளந்து தரப்படவில்லை. இதனால் தங்களது வீடுகளை காலி செய்ய முடியாது என்று அந்த மக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் பொக்லைன் வாகனத்துடன் வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறையின் துணையோடு வீடுகளை இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்பாடி வட்டச் செயலாளர் ஆர்.சுடரொளியன் தலை மையில் வட்டாட்சியரை சந்தித்து  முறையிட்டனர். அப்போது,  மாவட்ட ஆட்சியரை கலந்தாலோசித்து குகையநல்லூர் பகுதியிலேயே மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எம்.கணேஷ், வாலிபர் சங்க தலைவர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.