கடலூர்,ஆக.22-
பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டி குப்பத்தைச் சேர்ந்த சின்ன ஓடப்பன் குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (61) இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மனைவி வளர்மதியுடன் வசித்து வருகிறார். திங்களன்று (ஆக.21) மதியம் உறவினர் வீட்டிற்கு சென்று வீடு திரும்பினர்.
அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 30 சவரன் நகை திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயங்களை சேகரித்து கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர். மேலும், அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் பார்த்து சோதனை செய்தனர்.