districts

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும்

 செங்கல்பட்டு, ஆக. 28- அனைத்து சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட முதல் மாநாடு அமைப்பாளர் து.மூர்த்தி தலை மையில் நடைபெற்றது. அமைப்பு குழு உறுப்பினர் எ.துலுக்கானம் வரவேற்றார். அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பி.பன்னீர் செல்வம் துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் சி.முகமது உசேன், சத்துணவு ஊழியர்  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெயசுதா உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து அனைத்து சத்து ணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ராமமூர்த்தி பேசினார். மாவட்ட அமைப்பு குழு உறுப்பி னர் ராஜாமணி நன்றி கூறினார். அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், இலவச மருத்துவ காப்பீடு, குடும்ப நல  நிதி உள்ளிட்டவைகளை அரசு அனைத்து அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஓய்வூதியர் களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  சங்கத்தின் மாவட்டத் தலைவராக து.மூர்த்தி, செயலாளராக எ.ராமலிங்கம், பொருளாளராக ஏ.வியாகுல மேரி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.