கிருஷ்ணகிரி,டிச.14- ஒன்று பட்ட தருமபுரி மாவட்டத்தில் 1984 ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ஊத்தங்கரையில் தொடங்கப்பட்டது. 1000 தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை கொடுக்கப் படும் என்று அன்றைக்கு அறி வித்தனர். ஆனால் 2001 ஆம் ஆண்டில் 300 தொழி லாளர்களுக்கு தான் நிரந்தர வேலை கொடுக்கப் பட்டது. ஒப்பந்த அடிப்படை யில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் அமர்த்தினர். அதில் ஒரு வரைக்கூட நிரந்தர தொழி லாளர்களாக மாற்ற வில்லை. தற்போது, 100-க்கும் குறைவான தொழிலாளர் கள் தான் நிரந்தர பணியில் உள்ளனர். அதேபோல் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் 200 ஆக குறைத்து விட்டனர். 35 ஆண்டு காலம் பணி புரிந்த நிரந்தர தொழி லாளிக்கு ரூ. 25,000 கூட மாத ஊதியம் வழங்கப்பட வில்லை. பணி ஓய்வு பெறு வோருக்கு ரூ.3000 கூட ஓய்வூதியம் கிடைப்ப தில்லை. இந்நிலையில் பணிக் கொடை தொகை கணக்கை தவறாக கணக்கிட்டதால், 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை பணி ஓய்வு பெற்ற வர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் , 30 நாள் என்பதை 26 நாட்களாக நிர்வாகம் கணக்கிட்டதாகும். கடந்த 5 ஆண்டுகள் பணி ஓய்வு பெற்று பணிக் கொடை முழுமையாக கிடைக்காமல் உள்ள 137 தொழிலாளர்கள் 16 பேர் மருத்துவம் பார்க்கவும் வழியில்லாமல் மாண்டு போனார்கள். இது குறித்து ஆலை நிர்வாகம், பணிக்கொடை கணக்கிடும் அலுவலகம் என்று மாறி மாறி பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில், பணி ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கு பணிக் கொடை நாட்களை திருத்தி ஒவ்வொருவருக்கும் சேர வேண்டிய ரூ. 3 லட்சம் வரையிலான தொகையை உடனடியாக கொடுக்கும் வரை உண்ணா நிலை போராட்டம் நடத்துவோம் என்று பாதிக்கப்பட்டவர்கள் அறிவித்தனர். இந்த தகவலை அறிந்த வருவாய் கோட்டாட்சியர் பாபு, வருவாய் அலுவலர் சாதனை குரல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, பிரச்ச னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பிறகும் எந்த நட வடிக்கையும் இல்லை. இத னால் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளது. இது குறித்து 8 மாதத்திற்கு முன்பு பணி ஓய்வு பெற்ற கூட்டுறவு நூற்பாலையில் சிஐடியு சங்க முன்னாள் தலைவரும் ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகியுமான கோபால் முன்னாள் நிர்வாகி கள் அண்ணாதுரை, கோவிந்தசாமி, சதாசிவம், கந்தசாமி ஆகியோர் கூறினர்.