சென்னை, மே 26 -
40 ஆண்டுகளாக குடியிருக்கும் தங்களை வெளியேற்றக்கூடாது என வலி யுறுத்தி வெள்ளியன்று (மே 26) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருங்குடி திரு வள்ளூவர் நகர் மக்கள் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தினர்.
பெருநகர சென்னை மாநகராட்சி 182வது வட்டம், திருவள்ளுவர் நகர், சர்வே எண் 130, 131க்கு உட்பட்ட 4.5 ஏக்கர் நிலத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் முறைசாரா தொழி லாளர்களாக உள்ளனர்.
1968 ஆம் ஆண்டு அரசு நிதியுதவியோடு 24.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. பர்மா அகதிகளுக்கான கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் உருவாக்கப்பட்டு அதன்வாயி லாக 317 உறுப்பினர்களுக்கு மனைகள் வழங்கப்பட்டது. ஒதுக்கீடு பெற்றவர்களில் 6 பேரை தவிர மற்றவர்கள் குடியேற வில்லை. எஞ்சிய மக்கள் பிழைப்பை தேடி வடசென்னை பகுதிக்கு சென்றுவிட்டனர். அவ்வாறு சென்றவர்கள் பின்னர் மனை களை விற்றுவிட்டனர்.
இதில், எஞ்சிய சுமார் 4.5 ஏக்கர் நிலம் மேடு பள்ளமாகவும், சதுப்பு நிலமாக வும், முட்புதர்கள் மண்டி கிடந்தன. இந்த இடத்தில், சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர். அந்த இடம் தற்போது திரு வள்ளூவர் நகராக உருவாகி உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியை மாநகராட்சி அங்கீ கரித்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, வரிகளை வசூலித்து வருகிறது.
இந்நிலையில் நிலமோசடிக்காரர்கள் திரு வள்ளூவர் நகரை அபகரிக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கெதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் செயல்படாத கூட்டுறவு சங்கத்தின் பெயரில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில், 6 மாதத்தில் குடியிருப்புகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. எனவே, குடியிருப்புகளை பாதுகாக்க வேண்டும் என வலியறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து சென்னை மாவட்ட துணை ஆட்சியர் லாவண்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் பி.ஜெயவேல், சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் டி.ராமன், திருவள்ளுவர் நகர் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்க நிர்வாகி கள் எஸ்.ஜெயபிரகாசம், முனியப்பன், வரதன் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக, ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக லாவண்யா உறுதியளித்தார்.