செங்கல்பட்டு, ஆக 23-
போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவை யான நிதியை பட்ஜெட்டில் வழங்க தமிழ்நாடு அசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் காஞ்சிபுரம் மண்டல 22 வது பேரவை கூட்டம் செவ்வாயன்று ( ஆக. 22) செங்கல்பட்டு மாவட்டம், வண்ட லூரில் தலைவர் என்.நந்தகோபால் தலைமை யில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் பி.ரமேஷ் சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்தார், துணை பொதுச்செயலாளர் வி.சிவலிங்கம் வரவேற்றார். பேரவையை துவக்கி வைத்து சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன் பேசினார்.
பொதுச் செயலாளர் பி்.சீனிவாசன் வேலை அறிக்கையும், பொருளாளர் ஜி.கமலக்கண்ணன் வரவு, செலவு அறிக்கையை சமர்பித்தனர். சம்மேளன உதவித் தலைவர்கள் ஏ.பி.அன்பழகன், வி.பிச்சை, சம்மேளன பொருளாளர் வி.சசி குமார், ஓய்வு பெற்ற நல அமைப்பின் செய லாளர் பி.ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூட்டத்தை நிறைவு செய்து சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் பேசினார்.
தீர்மானங்கள்
பழைய பென்ஷன் திட்டத்தை நடை முறைப்படுத்தவேண்டும்,15வது ஊதிய ஒப்பந்தத்தை காலதாமதம் இன்றி பேசி முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும், ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த பலன்களை யும் டிஏ உயர்வையும் வழங்க அரசு வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகளாக தலைவர் என்.நந்தகோபால், பொதுச் செயலாளர் பி.சீனிவாசன், பொரு ளாளர் ஜி.கமலக்கண்ணன் உள்ளிட்ட 23 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.