சென்னை, பிப்.22- பிரத்யேக சுற்றுச்சூழல் கவுன்சிலை அமைக்கவேண்டும் என்று புதுதில்லி யில் நடைபெற்ற உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் வலியுறுத்தினர். எரிசக்தி மற்றும் ஆதார மையம் (டிஇஆர்ஐ) நடத்தும் ஆண்டு உச்சி மாநாட்டில் ‘பசுமை வளர்ச்சிக்கான தேசிய துணை நிர்வாகம் குறித்த அமர் ்வில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகை யில், உள்ளாட்சி அளவில் , மாவட்டம் மற்றும் மாநில அளவில் செயல்படுத்த வேண்டிய தேவைகள் ஏராளமாக உள்ளன. தேசிய அளவில் கொள்கைகள் வகுக்கப்பட்டாலும், பெரும்பாலான வேலைகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் தான் செயல்படுத்தப்பட வேண்டும். எனவே பருவநிலை மாற்றத் தைச் சமாளிப்பதற்கும் பசுமை வளர்ச் சிக்கு உதவுவதற்கும் தேசிய அளவில் கவன்சில் அவசியம் என்றார். மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்ய உத்தவ் தாக்கரே பேசுகையில், ஜிஎஸ்டி கவுன்சிலை போன்று மத்திய மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்களை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் கவுன்சில் அமைக்கப்படவேண்டும் என்றார். இந்த குழு தேசிய அளவில் இலக்குகளை யும் கொள்கைகளையும் நிர்ணயித்து மாநிலத்தில் செயல்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.