districts

img

அனைத்து மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கும் வழங்க கோரிக்கை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அனைத்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் குடும் பத்தினருக்கும் வழங்க உத்தர விடக்கோரி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது,

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வின்செண்ட் பொதுசெயலாளர் ஜான்சிராணி ஆகியோர் இளைஞர் நலன் மற்றும் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலினை சந்தித்து மனு அளித்த னர். அதில்  சமூகப் பாதுகாப்பு திட்ட  உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இத்திட்டத்தில் பயன்பெற முடியாத  வகையில் விதிகள் உருவாக்கி யிருந்ததை தற்போது தளர்த்தி அவர் களும் பயன்பெறும் விதத்தில் நடை முறைப்படுத்த தமிழக அரசு முன்வந் திருப்பதற்கும் நன்றி தெரிவித்தனர்.

தற்போதும் பல்வேறு காரணங் களைக் காட்டி மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்  றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு  இவ்வுரிமைத்தொகை மறுக்கப் பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, குடும்ப தலைவிகளாக உள்ள மாற்றுத்திறனாளி பெண்கள் ஏற்கனவே பெற்று வரும் மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகையைக் காரணம் காட்டி கலைஞர் மகளிர் உரி மைத் தொகை மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், சில குடும்பங்களில் குடும்பத் தலைவியாக வேறு பெண் கள் எவரும் இல்லாமல் மாற்றுத்திற னாளியாக உள்ள பெண்ணே குடும்பத்  தலைவியாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு மாற்றுத் திறனாளி களுக்கு உதவித் தொகை கிடைப்பதை காரணம் காட்டி இக்குடும்பங்கள் முற்றிலுமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற முடியாமல் புறக்கணிக்கப்படுகின்றனர். இது, எந்த விதத்திலும் நியாயமில்லை என எமது சங்கம் கருதுகிறது. மேலும், மாற்றுத்திறனாளி பயன்படுத்தும் வாகனம் உள்ளிட்ட உடமைகள் வைத்திருப்பதைக்கூட காரணம் காட்டி ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மறுக்கப் பட்டுள்ளது.

கர்நாடகா, மே.வங்கத்தில் இது போன்று இல்லை கர்நாடகாவில் இதே போன்று குடும்பத்தலைவிகளுக்கு தற்போது அமல்படுத்துப்பட்டு வரும்  ரூ. 2,000 “கிரகலட்சுமி” திட்டத்திலும்,  மே.வங்கத்தில் 25 முதல் 60 வயது டைய பட்டியலின பெண்களுக்கு ரூ.1000மும் மற்ற பெண்களுக்கு ரூ.500-ம் வழங்கும் “லட்சுமி பந்தர்”  திட்டங்களிலும் மாற்றுத்திறனாளி களும் பயன்பெற்றே வருகின்றனர்.

எனவே, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளியாக உள்ள குடும்பத் தலைவி களுக்கும், அனைத்து மாற்றுத்திற னாளி குடும்பங்களுக்கும் கலைஞர் மக ளிர் உரிமைத்தொகை வழங்கிட சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதவிட வேண்டுமென எமது  சங்கம் கோருவதாகவும் அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆவன செய்வதா கக் கூறினார்.