கடலூர், ஜன. 21- பாலூர் பகுதி அருந்ததியின மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் பாலூர் பகுதியில் வசிக்கும் அருந்ததியின மக்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இலவச மனைப்பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்கு நிலம் எடுப்பது தொடர்பாக உரிமையாளர்களிடம் ஒப்புதலும் பெறப்பட்டது. முதற்கட்ட பணி துவங்கிய நிலையில் பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டது. நில உரிமையாளரும் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதுவரை அந்த பகுதியில் உள்ள அருந்ததியர் இன மக்களுக்கு மனைப் பட்டா கிடைக்கவில்லை. தற்போது கோட்டாட்சியர் அந்த பகுதி அருந்ததிய மக்களுக்கு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் எம்.nஜயபாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.அமர்நாத், உள்ளிட்டோர் நேரில் மனு அளித்தனர்.