திருவண்ணாமலை,செப்.1- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், நீப்பத்துறை கிராமத்தில் இருளர் பழங்குடி மக்கள் நுற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒரே வீட்டில் பல ஆண்டு களாக 2 , 3 குடும்பங்களாக வசிக்கும் நிலைமை இருந்து வருகிறது. தினசரி செங்கல்சூளை வேலைக்கும், கட்டுமான வேலைக்கும் சென்று அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டி பலமுறை மனு கொடுத்ததின் அடிப்படையில், அதே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சர்வே எண்.20, 21, 140 ஆகிய இடங்களில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வட்டாட்சியர் அறிவுறுத்தலின்படி, பட்டா வழங்கு வதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்னர் நிலஅளவீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது வரை இவர்களுக்கு வீட்டு மனை வழங்கவில்லை. எனவே, நீப்பத்துறை கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வீட்டுமனை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் எஸ்.ராமதாஸ், ஏ.லட்சுமணன், காமாரஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.