கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள கே. எட்டிப்பட்டி கிராம மக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், கிராமத்தில் 100 நாள் திட்ட அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலையும், முழுமையான கூலியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.