districts

சென்னை முக்கிய செய்திகள்

கோயில் பணியாளர்களை  அரசு ஊழியராக்க கோரிக்கை

சென்னை, ஜன. 8 - கோயில் பணியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும் என்று தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் வலியுறுத்தி உள்ளது. இந்த சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிறன்று (ஜன.7) சென்னையில் நடைபெற்றது. மாநில தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் திருக்கோயில் பணியாளர்களுக்கும் விடுப்பு சலுகை மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க காப்பாளர் கண்ணன், மாநில செயலாளர் ரமேஷ் மாநில பொருளாளர் சேட்டு, மாநில அமைப்பாளர் குரு ராஜன்,  சென்னை கோட்ட தலைவர் தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காலமானார்

சென்னை, ஜன. 8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி, 150வது வட்ட கிளை உறுப்பினர் தோழர் ஜார்ஜ் சொக்கையா ஞாயிறன்று (ஜன.7) உடல் நலக்குறைவால் காலமானார்.  அவருக்கு வயது 76. போரூர் கார்ட னில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எஸ்.குமார், மதுரவாயல் பகுதி செயலாளர் வி.தாமஸ், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆர். பாலசுப்பிரமணியம், கே.ரத்தன குமரன், கிளைச் செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன், வழக்கறிஞர் சுப்பு ராம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி னர். இதனை தொடர்ந்து அவரது உடல் திங்களன்று (ஜன.8) போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

புதுவை கொண்டு வந்த திட்டம் என்ன? 
தமிழிசைக்கு முன்னாள் முதல்வர் கேள்வி

புதுச்சேரி, ஜன.8- துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்திற்கு என்ன திட்டத்தை கொண்டு  வந்தார் முன்னாள் முதல்வர்  நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, “ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ் நாட்டில் பெய்த மழை பேரிடர் இல்லை. மாநில  அரசுதான் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.  தமிழகத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் தேசிய பேரிடராக அறிவிக்காமல் இருந்தது அதிகார போதையை காட்டுகிறது. இது தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.   புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒன்றிய அரசு மாநில அரசுகளை வஞ்சிப்பதில்லை என கூறு கிறார். புதுவை மாநிலத் திற்கு அவர் என்ன திட்டங்களை கொண்டு வந்தார் ரூ.2 ஆயிரத்து  500 கோடி மானியம் வரவில்லை.சட்டப் பேரவைக் கட்ட நிதி தரவில்லை. ஸ்மார்ட் சிட்டி  திட்டம் கிடப்பில் கிடக்கி றது. ஆளுநர் தமிழிசை  பொய்யான தகவல் கூறு கிறார். அவர்கள் பாஜக வின் முகவர்களாக செயல் படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், எம்பி உடனிருந்தார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு  திறன் மேம்பாட்டு பயிற்சி

சென்னை, ஜன.8- ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழில் துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார். இதுகுறித்துஆட்சியர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு வருமாறு,  தமிழ்நாடு ஆதிதிரா விடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ),  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்க ளுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. மெக்கானிக்கல் புரொடக்ஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பட்டயப்படிப்பு, பொறியியல்  பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம். தங்கி படிக்கும் வசதியும் உண்டு.  இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு றறற.வயானஉடி.உடிஅ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள லாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கவிதை,  கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

சென்னை,ஜன.8- தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக 38 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் சென்னை மாவட்ட அளவில் மேல்நிலைப்  பள்ளி மாணவர்களுக்கு ஜன. 9 அன்று எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அனைத்து கல்லூரி மாண வர்களுக்கு ஜன. 10 அன்று சென்னை மாநிலக் கல்லூரியிலும்  கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன. மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டியில் கலந்து  கொள்வர். மாநில அளவிலான போட்டிகள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜன. 23 அன்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜன. 24 அன்றும் நடைபெறவுள்ளன. 38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் நடைபெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்பு கள் போட்டி நடைபெறும் நேரத்தில் அறிவிக்கப்படும்.

 ஊராட்சிமன்ற தலைவர்  காசோலை அதிகாரம் ரத்து

கிருஷ்ணகிரி,ஜன.8-  கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி அருகே உள்ளது  சென்னசந்திரம் ஊராட்சி மன்றம் தலைவர் எம்.சக்கரவாத்தி (55). செயலாளராக மணிகண்டன் (35) பணியாற்றி  வந்தார்.  இந்த ஊராட்சி ஒன்றியத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் காசோலைகள் தவறாகப் பயன்படுத்தப் படும் ரூ. 15.92 லட்சம் முறைகேடு நடைபெற்றதாக புகார்  எழுந்தது.  இதுகுறித்து, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் மகாதேவன் மேற்கொண்ட விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து, அவரது முறைகேடான நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்த ஊராட்சி மன்ற செயலாளரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.