districts

img

100 வேலைத் திட்டம் காரைக்கால் முழுவதும் அமல்படுத்த கோரிக்கை

புதுச்சேரி,ஜூலை 28-

     நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் கூலி ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், விவசாய தொழி லாளர்களின் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும். மூடிகிடக்கும் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   புதுச்சேரி மாநிலத் தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் அ.லாசர் கலந்து கொண்டு உரை யாற்றினார். புதுச்சேரி மாநிலச் செயலாளர் தமிழ்ச் செல்வன், சிபிஎம் காரைக்கால் மாவட்டச் செயலாளர் தமீம் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.

அதிகாரியிடம் மனு

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில், வட்டார வளர்ச்சி அதி காரி சந்தியாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.