விழுப்புரம், செப்.1- மழைக்காலத்திற்குள் ஏரி நீர்வரத்து வாய்க்கால் களை தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவிச் சந்திரன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்ட றிந்து மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், விவ சாய சங்க பிரதிநிதிகள், கோரிக்கைகள் குறித்து பேசுகையில் ஆழாங்கால் வாய்க்காலில் உடைக்கப் பட்ட கலிங்கல் இன்னும் சரி செய்யப்படவில்லை. அதனை உடனே சரிசெய்ய வேண்டும், அதுபோல் வாய்க்காலுக்கு தண்ணீர் வரக்கூடிய பகுதியும் தூர்ந்து போயுள்ளதால் அதனை உடனடியாக தூர்வார வேண்டும். எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் 200 அடி தூரத்திற்கு சுற்றி லும் கான்கிரீட் சுவர் எழுப்பி தற்காலிகமாக சீர மைக்க வேண்டும். குடி மராமத்து பணிகள் முடிக்கப் பட்ட ஏரிகளில் கருவேல மரங்கள் அதிகம் முளைத்துள்ளன. உடனே அதனை அகற்ற வேண்டும். ஏரிகளில் கலக்கும் கழிவு நீர் விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ள மதுபான தொழிற் சாலையின் கழிவு கள் பொன்னேரியில் கலக் கிறது, அதுபோல் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மருதூர் ஏரியில் கலக்கப் படுகிறது. இதனால் ஏரி நீர் மாசுபடுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப் படுகிறது. இந்த கழிவுநீரை ஏரியில் விடாமல் வேறு எங்காவது விட வேண்டும். அல்லது சுத்திகரிப்பு செய்து அனுப்ப வேண்டும். கரும்பு பயிர் செய்வதற் கான கடன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், மழைக்காலத்திற்குள் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஏரி களை உடனடியாக தூர்வார வேண்டும், ஆக்கிர மிப்புகள் இருந்தால் அத னையும் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வார வேண்டும். விழுப்புரம்- நாகப்பட்டி னம் 4 வழிச்சாலை பணிக் காக நிலம் கையகப் படுத்தப்பட்டதற்கு பல பேருக்கு இன்னும் உரிய இழப்பீடு தொகை கிடைக்க வில்லை. அந்த தொகையை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பம்பை ஆற்றின் மூலம் 50 ஏரி கள் நிறைகிறது. ஆனால் பம்பை ஆற்றை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அந்த ஆற்றுக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். அதுபோல் ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு நீர்வரத்து வாய்க்காலையும் மழைக்காலம் தொடங்கு வதற்கு முன்பாக தூர்வார வேண்டும். இவ்வாறு வலி யுறுத்தினர்.