districts

சென்னை முக்கிய செய்திகள்

சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட  நிழற்குடைகள் மீண்டும் அமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு, அக்.22- சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகளை மீண்டும் அமைக்க பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கிய பகுதியாக தாம்பரம்  இயங்கி வருகிறது.  தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியே ரயில் பாதைகளும் இருப்பதால் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த சாலையை விரிவாக்கம் செய்தால் மற்றும் முக்கிய இடங்களான பெருங்களத்தூர் பொத்தேரி மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்தது வந்தது. இந்நிலையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக செங்கல்பட்டு முதல் தாம்ப ரம் வரையில் சிங்கபெருமாள் கோயில், மறைமலைநகர், பொத்தேரி, ஊரப்பாக்கம், காட்டாங் கொளத்தூர் உள்ளிட்ட  அனைத்து பகுதிகளிலும் இரு புறங்களி லும் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டது. சாலை விரிவாக்க பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்ட இடங்களில் புதியதாக பேருந்து நிழற்குடை கள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை அனைத்து பேருந்து நிறுத்தங்களில் பேருந்து பயணிகள் நிழற்குடை இல்லாமல் வெயில் மற்றும் மழையில் பெரிதும் பாதிப்புக்கு  உள்ளாகி வருகின்றனர். உடனடியாக  தற்போது வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் பேருந்து பயணிகள் நிழற்குடை இல்லா மல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட் டுள்ளது. உடனடியாக அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடைகளை மீண்டும் அமைத்து தர வேண்டும் என பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம், கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை,செப்.22- ஆயுத பூஜை தொடர் விடுமுறையை யொட்டி பேருந்துகள், கார்கள், ரயில்கள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்துள்ளனர். இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்து கள் இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து இயக்கப்ப டும் 2100 பேருந்துகளுடன் சேர்ந்து 950 பேருந்துகள் இயக்கப்பட்டது. சனிக்கிழமையன்று  12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர்.  பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட 1545 பேருந்துகள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.27.67  லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.15.41 லட்சம் வசூலிக்கப்பட் டுள்ளது. இதேபோல் ரூ.24.53 லட்சம்  வரி விதிக்கட்ட நிலையில் ரூ.7.54 லட்சம் வசூலிக்கப்பட்டது. 102 பேருந்து கள் சிறை பிடிக்கப்பட்டன. சொந்த ஊர்களுக்கு சென்ற வர்கள் திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை, அக்.22 -  மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை யாற்றி வரும் நிறுவனங்க ளுக்கு தமிழ்நாடு முதல்வர் விருதுகள் வழங்க உள்ளார். இதற்கான விண்ணப் பத்தை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவல கத்திலோ அல்லது www.scd.tn.gov.in என்ற  வளைதளத்திலோ பதிவிறக் கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்து அனைத்து சான்றுகளுடன் ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல  அலுவலர், மாவட்ட ஆட்சி யர் அலுவலகம், பி-பிரிவு  தரை தளம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் அக்.25 க்குள் சமர்ப் பிக்க வேண்டும் என்று ஆட்சி யர் ச. வளர்மதி தெரிவித் துள்ளார்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சேப்பாக்கத்தில் இன்று மோதல்

சென்னை,அக்.22- சேப்பாக்கம் மைதானத்தில் 4-வது போட்டி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. உலக கோப்பை தொடரின் 22-வது  ஆட்டமாகும். இதில் பாபர் ஆசம் தலை மையிலான பாகிஸ்தான்-ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலை மையிலான ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும்  ஆர்வத்தில் பாகிஸ்தான் உள்ளது. இரு அணிகள் இடையே  கடைசியாக நடந்த 5 போட்டி யிலும் பாகிஸ்தானே வெற்றி பெற்றிருந்தது. இரு அணிகளும் இன்று  மோதுவது 8-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 7 ஆட்டத்திலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

ருபே கடன் அட்டை சலுகை

திருச்சி,அக்.22- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக் கையாளர்களுக்கு  RuPay கிரெடிட் கார்டு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அமேஸான்  விற்பனை திருவிழாவில் மலி வான ஆன்லைன் ஷாப்பிங்கை செய்வதற்கு RuPay கிரெடிட் கார்டுகளில் மாத தவணை முறை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எட்டு முக்கிய மான வங்கிகளின் சலுகையாக இது இருக்கும்.  இதனால் ‘ஆன்லைன் வாயிலாக ஜவுளிகள் உள்ளிட்ட பண்டிகை கால பொருட்களை வாங்கு வோர் உடனடியாக பணம் செலுத்தவேண்டும் என்ற நெருக்கடியில் இருந்து விடுபடுவர்.

பே டிஎம் மூலம் பணத்தை  கொள்ளையடித்த மர்ம நபர்கள்

சென்னை, அக்.22- சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களின் பே எடி எம் கணக்கில் இருந்து தவறுதலாக பணம் செலுத்தப்பட்டு உள்ளதாகவும் அதனை ரத்து செய்வதற்கு ஒன்று என்ற பட்டனை அழுத்துமாறும் கூறியுள்ளனர். அதை நம்பி ஜானகிராமன் பட்டனை அழுத்தியதும், அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 4,940 ரூபாய் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. சுதாரித்துக் கொண்ட ஜானகிராமன் பே டிஎம்மை தொடர்பு கொண்டு தகவல் அளித்ததுடன், இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.