குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கல்குணம்ஊராட்சியில் ஆதிதிராவிடர் பகுதி மற்றும் மாதா கோயில் பகுதி மக்களுக்கு தொடர்ந்து 8 மாதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தில் நூறுநாள் வேலை வழங்கக்கோரிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் ஏ.வாசு தலைமையில், விவசாய சங்க ஒன்றிய துணை தலைவர் எம்.ரட்சகநாதன் முன்னிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம்.பிதண்டபாணி உள்ளிட்டோர் பிடிஓ விடம் வேலை கேட்டு மனு வழங்கினர். வாலிபர் சங்க ஒன்றிய துணை தலைவர் பி.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.