சென்னை, அக். 14- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டலம் 2இல் 8 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெரிய தொழிற்சாலை, சிறு குறு நிறுவனங்கள் என 140க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் சாதாரண தொழிலாளர்களே அதிகம் வசிக்கின்றனர். குடிநீர் வாரியம் கட்டணம் வசூல் இந்த பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படாமலேயே குடிநீர் வரி மட்டும் வசூல் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்ற னர். மேலும் குடிநீரை குடம் 5 ரூபாய் கொடுத்தும், கேன் தண்ணீரை காசு கொடுத்தும் வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது என்றும், குடிநீர் இணைப்பு வழங்கிய பின்பு அதற்குரிய கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும். அதுவரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதாள சாக்கடை
பாதாள சாக்கடை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைப் பணிகள் இதுவரை முழுமையடைய வில்லை. பணிகள் முடிவடைந்த பகுதிகளிலும் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை. சாலைகள் இந்த பகுதியில் உள்ள மூன்று பிரதான சாலைகளில் காமராஜ் சாலை மட்டுமே தார் சாலையாக காட்சியளிக்கி றது. பாடசாலை தெரு, பார்த்தசாரதி தெரு ஆகிய இரண்டு சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கி றது. அதே போல் அனைத்து உட்புறச் சாலைகளும் சேதமடைந்து காணப்படு கின்றன. பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்த வார்டுகளில் கூட சாலை அமைக்கப் படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் சாலை கள் உள்ளன. ஆமுல்லைவாயில் பாலம் முதல் அரியலூர் வரை உள்ள இணைப்பு சாலையில் டோரண்ட் என்ற கேஸ் நிறுவனம் சுமார் 5 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டி குழாய் பதித்து பள்ளத்தை மூடி விட்டனர். அதற்கான கட்டணத்தையும் (ரோடு கட்டிங்) மாநகராட்சிக்கு செலுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மாநகராட்சி அந்த 5 அடி அகலத்தை விட்டு விட்டு சாலை அமைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப் படுகின்றனர். எனவே அந்த 5 அடி அகலத்தையும் இணைத்து சாலை அமைக்க வேண்டும் என ஆமுல்லை வாயல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
ஆபத்தான பள்ளம்
கேஸ் இணைப்புக்காக கொண்டு செல்லப்படும் வழித்தடத்தின் ஒரு இடத்தில் முழுமையாக மூடாததால் திறந்து கிடக்கிறது. மேலும் பாதுக்காப்பு தடுப்பும் அமைக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பணிகள் முழுமையடையாத பகுதிகளில் பாது காப்பு தடுப்பு அமைக்க வேண்டும். காற்று மாசு இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கலவை மாசு காற்றில் கலப்பதால் அங்கு வசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறு, தோல் நோய் போன்றவை ஏற்படுவதாகவும், அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையிலும் அதற்கு இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை. மேலும் தற்போது பெரும்பாலான சாலைகள் சேத மடைந்துள்ளதால், அதில் இருந்து ஏற்படும் மாசுக்களால் வாகன ஓட்டி கள், நடந்து செல்பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
சமூக நலக்கூடம்
மணலி பேரூராட்சியின் தலை வராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.சங்கர் 1989ஆம் ஆண்டு மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் ஜவகர்லால் நேரு நூற்றாண்டு திருமணக் கூடத்தை (சமுதாயக் கூடம்) கட்டினார். இது அந்த பகுதி மக்களுக்கு பெரிய உதவி யாக இருந்தது. ஆனால் முறையான பராமரிப்பின்றி கடந்த 15 ஆண்டு களுக்கும் மேலாக சமுக நலக் கூடம் மூடிக்கிடக்கிறது. மேலும் இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதேபோல் சின்ன சேக்காடு பகுதி யில் அமைக்கப்பட்ட சமூக நலக் கூடமும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக்கிடக்கிறது.
திருமண மண்டபம்
எம்எம்டிஏ 2ஆவது பிரதான சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் திருமண மண்டபம் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையிலும், கடந்த 6 மதாங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சாதாரண மக்கள் சிறு சிறு நிகழ்ச்சி களுக்கு கூட தனியார் மண்டபத்திற்கு பெரும் தொகை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக திருமண மண்டபத்தை திறக்க வேண்டும். இரண்டு சமூக நலக் கூடங்களையும் மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையம்
மணலி, மஞ்சம்பாக்கம், சின்ன சேக்காடு ஆகிய பகுதிகளில் 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மஞ்சம்பாக்கம், சின்ன சேக்காடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி மருத்துவர்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே தினசரி மருத்துவர்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும். மணலில் உள்ள மையத்தை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். அதேபோல் கன்னியம்மன் பேட்டை யில் இருந்த ஆரம்ப துணை சுகாதார நிலையம் அம்மா மினி கிளினிக்காக மாற்றப்பட்டது. ஆனால் அதுவும் தற்போது செயல்படாமல் உள்ளது. எனவே மீண்டும பழையபடி ஆரம்ப துணை சுகாதார நிலையமாக செயல்பட நடவடிக்கை எடுக்க என்ற கோரிக்கையும் மக்களிடம் எழுந்துள்ளது. பூங்கா அமைக்க வேண்டும் எம்.எம்.டி.ஏ. 120ஆவது தெருவில் இருந்த குழந்தைகள் மையத்தின் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அங்கு குழந்தைகள் விளையாடும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணலி சேக்காடு பகுதிச் செயலாளர் பாபு கோரிக்கை விடுத்துள் ளார். மேலும் சாலைகளை உடனடி யாக சீரமைக்கப்படவில்லை என்றால் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபடு வோம் என்றும் அவர் கூறினார். மணலி சேக்காடு பேரூராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் முழுமையடைய வில்லை. இன்னும் பழைய பேரூராட்சி போலவே காட்சியளிக்கின்றன. எனவே தமிழ்நாடு அரசும், மாநகராட்சி யும் சிறப்பு நிதி ஒதுக்கி மண்டலம் 2ஐ மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பெயரளவில் மட்டுமே மாநகராட்சிக் குட்பட்ட பகுதி என கூறிக்கொள்ள முடியும் என்றால் அது மிகையல்ல.
- எஸ்.ராமு