விழுப்புரம், நவ. 14- திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் ஆடு, மாடு, கோழி வளர்த்து வருகின்றனர். ஆடுகளுக்கு வாய் கோ மாரி, அம்மை நோய், காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி ஆயிரக் கணக்கான கால்நடைகள் இறக்கும் நிலையில் உள்ளன. நோய் தாக்கி 10 நாட்களுக்கு மேலாகி யும் கால்நடை மருத்து வர்கள் யாரும் வந்து பார்வை யிடவில்லை என்று விவ சாயிகள் புகார் தெரி விக்கின்றனர்.கால்நடை களை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் முதி யோர்களாக இருப்ப தால் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆனத்தூர் கால் நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படு கின்றனர். எனவே சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.