districts

img

சேத்துப்பட்டு அரசுப் பள்ளி சீரமைப்பு

திருவண்ணாமலை, மே 9- திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், இடையான்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிப்பறைகள் மாணவர்கள் பயன்படுத்த முடியாமல் சேதமடைந்தும், சுற்றுச் சுவர் இடிந்து விழும் நிலையிலும் இருந்தது. பழுதடைந்த சுற்றுச்சுவரை இடித்துவிட்டு புதிதாக சுற்றுச்சுவர் கட்டிக்கொடுக்க வேண்டும்,  சேதமடைந்த கழிவறையை சீர மைத்து இரும்பு கதவு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இடையங்குளத்தூர் கிராமத்தில் செவ்வாயன்று (மே 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் தங்க மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், வட்டச் செயலாளர் எல்லப்பன், முன்னாள் வட்டச் செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளி சீரமைப்பு பணிகள் உடனடியாக துவங்கப்படும் என உறுதி யளித்தனர்.  இதனைத் தொடர்ந்து, ரூ. 4 லட்சத்து 90 ஆயிரத்தில் கழிவறை கட்டும் பணி யையும் சீரமைப்பு பணிகளையும் துவக்கி னர். பிறகு, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.