districts

சென்னை முக்கிய செய்திகள்

மகளிர் உரிமை  திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குக

திருவள்ளூர், அக் 31- கலைஞர் மகளிர் உரிமை  திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு உடனடி யாக ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு தற்போது கலைஞர் மகளிர் உரிமை  திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு மகளிர் மத்தியில் நல்ல  வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை  செயல்படுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் 1253 தொழிலாளர்களை தேர்வு செய்து பல்வேறு கட்டங்களாக பயிற்சி கொடுக் கப்பட்டது. பின்னர் மகளிர் உரிமை திட்டத்தில்  பயனாளிகளிடம் மனுக்களை பெற மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களுக்கும் சென்று மனுக்களை பெற்றனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு வீடுகளுக் கும் சென்று விசாரணை நடத்தி, பயனாளி களை தேர்வு செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட அமலாக்கத் துறை அரசாணை எண் : 18 தேதி 17.07.2023 -ன் படி கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் 1253 பேர் தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு  குறைந்தபட்ச ஊதியமாக  நாள் ஒன்றுக்கு ரூ.350 என தீர்மானிக்கப் பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை கூட 2 மாதம் வழங்கிய பின்பும்,  இந்த திட்டத்தை அமல்படுத்த  பாடுபட்டு வரும்  தொழிலாளர்களுக்கு  கடந்த 2 மாதமாக ஊதியம் தராமல் ஏமாற்றி வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படு கின்றனர். இந்த தொழிலாளர் விரோத போக்கை ? கைவிட்டு,  அனைவருக்கும் உடனடியாக ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக  அரசை சிஐடியு  மாவட்ட தலைவர் கே.விஜ யன், மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஜி.சந்தானம்  ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

சென்னை, அக். 31- சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன.  தற்போது கனமழை காரணமாக  செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஏரிக்கு நீர் வரத்து 362 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. இதில் 3135 மில்லியன்  கனஅடி தண்ணீர் உள்ளது. 188 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த  உயரம் 24 அடி. தற்போது ஏரியின் நீர்மட்டம் 22 அடியை  தாண்டி உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பலத்த மழை  பெய்தால் ஏரியில் இருந்து உபரிநீர் மீண்டும் திறக்கப்படும்.

பழவேற்காட்டில் குழந்தைகளின் அறிவியல் கண்காட்சி

திருவள்ளூர், அக் 31- பழவேற்காட்டில் இயங்கி வரும்  டச்சு அகாடமி நர்சரி  அண்ட் பிரைமரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது.  இந்த அறிவியல் கண்காட்சியில் மழலையர்களால் செய்து வைக்கப்பட்ட அறிவியல் பூர்வமான பல எடுத்துக் காட்டாக கண்காட்சி பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. சென்னை சமூக சேவை சங்கத்தினுடைய இயக்குநர் தந்தை எம்.வி.ஜேக்கப் துவக்கி வைத்த நிகழ்ச்சியில், செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் ஆர்.சி.எம் பள்ளி தலைமை  ஆசிரியைகள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் டெய்சி ராணி,பள்ளியின் பொறுப்பாளர் அருள் செல்வி,கோட்டைக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கே.சம்பத்,எம்.எஸ்.எஸ். நிர்வாக பொறுப் பாளரான ஹாஜா மொய்தீன் மற்றும் பள்ளி  ஆசிரியர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பங்கேற்று கண்காட்சியினை பார்வையிட்டனர்.

யானை சுட்டுக் கொலை:  வனத்துறை விசாரணை

கிருஷ்ணகிரி,அக்.31- தேன்கனிக்கோட்டை வட்டம், ஜவளகிரி காப்புக் காட்டிற்கு உட்பட்டது கக்க மல்லேஸ்வரம். இங்கு வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.  இதையடுத்து, அந்த யானையின் உடலை பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதில், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. யானையின் தந்தங்கள் அப்படியே இருந்தன.  இதையடுத்து கொல்லப்பட்ட யானையின் உடலில் இருந்து 2 தந்தங்களை வனத் துறையினர் பத்திரமாக எடுத்துச்  சென்றனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 சமூக நலக்கூடங்களை இனி  மாநகராட்சி இணையதளம் வாயிலாக பதிவு  செய்யலாம்

மாநகராட்சி அறிவிப்பு
 

சென்னை, அக். 31 - மாநகராட்சி சமுதாய நலக்கூடங்கள், கலையரங் குகளை இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநக ராட்சி மாமன்ற கூட்டம் செவ் வாயன்று (அக். 31) மேயர் ஆர்.பிரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி சமுதாய நலக்  கூடங்கள் மற்றும் கலை யரங்குகள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய் யும் முறை, கட்டிட உரிமங் கள் மற்றும் கட்டிடங்களை இடிப்பதற்கான கட்ட ணத்தை உயர்த்துவது உள்ளிட்ட 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய கணக்குக்குழுத் தலைவர் தனசேகரன் பேசு கையில், சென்னையில் உள்ள 3000 செல்போன் கோபுரங்களுக்கான சொத்து வரி நிலுவைத் தொகை ரூ.125 கோடி நீதிமன்ற வழக்கின் காரணமாக வசூலிக் கப்படாமல் உள்ளது. இதனைச் சிறப்புக் குழு அமைத்து வழக்கினை விரைந்து நடத்தி நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும். ஒன்றிய அரசிடம் இருந்து மாநகராட்சிக்குக் கிடைக்க வேண்டிய ரூ.4.97 கோடி மானியத்தை விரைந்து பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் வசூலிக்கப்பட்ட நூலக வரி சுமார் 239 கோடி ரூபாயை, மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு செலுத்தப்படவில்லை. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 10வது மண்டலம்,  137வது வார்டு, ஆற்காடு சாலை மற்றும் வன்னியர் தெரு சந்திப்பில் சர்வே எண்  148ல் அரசுக்குச் சொந்த மான சுமார் 23 ஆயிரத்து 680  சதுர அடி நிலத்தை தனி யார் ஆக்கிரமிப்பில் இருந்து  மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.