districts

img

சேம கோட்டையில் பயணிகள் நிழற்குடை அகற்றம்: சிபிஎம் முற்றுகை போராட்டம்

கடலூர், செப்.26- பண்ருட்டி அருகே சேமகோட்டையில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடையை மீண்டும் அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் சேமக்கோட்டை வழி யாக சென்னை முதல் கன்னியா குமரி தொழில் தட சாலை விரிவாக்கத்திற்காக பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்குடையை அகற்றப் பட்டது.  ஓர் ஆண்டுகள் கடந்தும் மீண்டும் பயணி கள் நிழற்குடை அமைக்கா ததை கண்டித்து சிபிஎம் தலைமையில் கிராம மக்கள் முற்றுகை போராட் டம் நடத்தினர். கிளை செயலாளர் ஏ. சிவராமன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி. உதயகுமார், எஸ்.திருஅரசு, வட்டச் செய லாளர் எஸ்.கே. ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் லோகநாதன், மணி, தேவநாதன், வினோத் குமார், ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் அம்பிகாபதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேல்விழி சுப்பிரமணியன் உள்ளிட்டோர்  போராட் டத்தில் கலந்து கொண்ட னர். இதையடுத்து நெடுஞ்  சாலைத் துறை அதிகாரி கள் நடத்திய பேச்சு வார்த்தையில் சேமக் கோட்டையில் ஆக்கிரமிப்பு களை அகற்றி மின் விளக்கு களுடன் கூடிய நிழற்குடை 20 நாட்களுக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி யளித்தனர்.