கடலூர், பிப்.5 - கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் பூ மார்க்கெட்டில் போக்குவரத்திற்கு இடை யூராக கடைகள் இருப்ப தாக கூறி அகற்றம் செய்யப் பட்டது. கடலூர் மாவட்டத்தி லேயே மிகப்பெரிய மலர் சந்தை திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மலர் கடைகள் உள்ளன. கடலூர் மாநகரம் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்களும் இங்கு தினசரி வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். அதேபோல் வெளி மாவட்டங்களுக்கும் இங்கி ருந்து பூ மாலைகள் அனுப்பி வைக்கப்படுகிறது.இந்த நிலையில் பூ மார்க்கெட்டில் போக்குவரத்துக்கு இடை யூறாக ஆக்கிரமிப்புகள் உள்ளதாக மாநகராட்சிக்கு புகார் வந்ததன் அடிப்படை யில், மாநகராட்சி நகர மைப்பு அலுவலர் ராஜ சேகர் தலைமையிலான அதிகாரிகள் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகளை ஒழுங்கு படுத்தும் பணி நடை பெற்றது. இதில் போக்கு வரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளின் மேற்கூரைகள் மற்றும் கீற்று கொட்டகைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. அப்போது அசம்பாவிதம் ஏதும் நடை பெறாமல் தடுக்கும் வகை யில் திருப்பா திரிப்புலியூர் காவல் ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.