மயிலாடுதுறை, மார்ச் 20 - மயிலாடுதுறை மாவட் டம் தருமபுரம் ஆதீன மடத்தி லிருந்து நடைப்பயணமாக புறப்பட்டு ஆக்கூர் வந்த டைந்த தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னி தானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பிரம் மச்சாரி சுவாமிகளுக்கு மும்மதங்களை சேர்ந்த வர்கள் வரவேற்பு அளித்தனர். திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் குடமுழுக்கு மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், செம்பனார்கோவில், காளகஸ்திநாதபுரம், ஆக்கூர் ஆகிய பகுதிகளின் வழியாக பாத யாத்திரையாக வந்த தருமபுர ஆதீனத்திற்கு பொதுமக்கள் தங்கள் வீடு களின் முன்பு நின்று உற்சாக வரவேற்பளித்தனர். ஆக்கூரில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன்மோகன் தலைமையில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் கள் தருமபுர ஆதீனத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்தனர். ஆக்கூர் பள்ளிவாசல் ஜமாத்தார்கள், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை ஆயர்கள் ஜான் சன் மான்சிங், சார்லஸ் எட்வின் தாஸ், பாபு பெர் ணான்டஸ் ஆகியோர் தலைமையில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்கள் வரவேற்றனர்.