மேடவாக்கம் அண்ணாமலை நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை உதவியோடு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 300 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இவற்றை சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் தீ.சந்துரு, அறக்கட்டளை நிர்வாகிகள் ஸ்வரன்சிங் ஐஏஎஸ், ஆர்.பழனிச்சாமி ஐஏஎஸ், எம்.தியாகராஜன், கே.பார்த்தசாரதி உள்ளிட்டோர் வழங்கினர்.