districts

img

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நிவாரணம்

விழுப்புரம், டிச.15- விழுப்புரம் மற்றும் பண்ருட்டி ஆகிய பகுதிகளில் பெஞ்சல் புயல் மழை யால் பாதிக்கப்பட்ட சுமைப்பணி தொழி லாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை சம்மேளன நிர்வாகிகள் வழங்கினர். விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநிலப் பொருளாளர் பி.குமார் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ஆர்.வேங்கடபதி, மாநில பொதுச் செயலாளர் ஆர்.அருள்குமார், மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தன் ஆகியோர் கலந்துகலந்து கொண்டு, சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வரும் 65 தொழிலாளர்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி னர். இதேபோன்று பண்ருட்டி சுமைப்பணி தொழிலாளர்கள் 50 நபர்களுக்கு வழங்கினர். பண்ருட்டி உத்திராபதி, சிபிஎம் விழுப்புரம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.வீரமணி,  சிவா, சுமைப்பணி சம்மேளன விழுப்புரம் தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.