districts

img

சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை,ஜன.11- சாத்தனூர் அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்காக இடது மற்றும் வலது புற  கால்வாய்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தண்ணீர் திறந்து வைத்தார்.   திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணையின் முழு நீர்மட்டம் 119.00  அடியாகும். இந்த நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு 7,321 மி.க.அடியாகும். ஜன. 11 ஆம் தேதி  காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.00 அடியாக இருந்தது.  இதனைத் தொடர்ந்து, சாத்தனூர் அணைக்கட்டிலிருந்து இடதுபுறம் கால்வாயில் வினாடிக்கு 330 கன அடி தண்ணீரும் வலது புறம் கால்வாயில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி வரை  100 நாட்களுக்கு நீர் திறந்து விடப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 46 கிராமங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 58 கிராமங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் உள்ள மொத்தம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். தற்போது, திறந்துவிடப்படும் தண்ணீர் 25 நாட்களுக்கு கடைமடை பகுதிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து நீர் வழங்கப் படும். எனவே, விவசாயிகள் சிக்கனமாக  பயன்படுத்துமாறு  கேட்டுக்கொண்டுள்ள னர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆர் பா.முரு கேஷ், மக்களவை உறுப்பினர்  சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன், (கலசப்பாக்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர். நீர் பகிர்மான முறைப்படுத்தும் பொறிஞர்  கிருஷ்ணகுமார்,  மாவட்ட வருவாய்  அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணா மலை வருவாய் கோட்டாட்சியர் மந்தா கினி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.