மு.இராமநாதன் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள இரு நூல்கள் வெளியீட்டு விழா செவ்வாயன்று (ஜன.2) சென்னையில் நடைபெற்றது. ஆய்வாளர் பழ.அதியமான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ‘தமிழணங்கு என்ன நிறம்?’ எனும் நூலை திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் வெளியிட, சூழலியலாளர் பால பன்னீர்செல்வமும், ‘ஆர்வெல்லின் ஆறு விதிகள்’ நூலை பள்ளிக்கல்வி பாதுக்காப்பு இயக்க அமைப்பாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி வெளியிட, பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத்தலைவர் வேண்மாள் கோவிந்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலாசிரியர் மு.இராமநாதன் ஏற்புரையாற்றினார். பாரதி புத்தகாலயம் க.நாகராஜன், நர்மதா தேவி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.