திருவண்ணாமலை, செப். 11- திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதிக்கு நூற்றுக்கணக்கான முறைசாரா கூலித் தொழிலாளர்கள் நாள்தோறும் வேலைக்கு வந்து காத்திருப்பார்கள். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இறையூர் கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி மற்றும் பீமனந்தல் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராணி ஆகியோர் கடந்த ஞாயிறன்று (செப்.8) அன்று கட்டுமான கூலி வேலைக்காக அங்கு வந்துள்ளனர். ஆனால் வேலை முடிந்து மாலை வீடு திரும்ப வேண்டியவர் கள், வீடு திரும்பவில்லை. பிறகு, இரவு முழுக்க உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் 200க்கும் மேற்பட்ட குவிந்து புகார் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார். பிறகு அனைவரும் கலைந்து சென்ற னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், செங்கம் வட்டார செயலாளர் ஏ. லட்சுமணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி. எம். பிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் நியூட்டன் ஆகியோர் உடனிருந்தனர்.