மணிப்பூரில் ‘மெய்டெய்’ பிரிவினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதாக ஆளும் பாஜக பற்ற வைத்த நெருப்பு, இந்தப் பிரிவினருக்கும் குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியினருக்கும் இடையிலான வன்முறையாக மாறி நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. கடந்த மே 3 அன்று துவங்கிய கலவரம் இப்போது வரை அடங்கியபாடில்லை. இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, பைரேன் சிங் தலைமையிலான ஆளும் பாஜக அரசு, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.