districts

ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு : காட்பாடியில் போக்குவரத்து மாற்றம்

காட்பாடி, மே 17- காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு செய்ய உள்ளதால் வேலூர் -சித்தூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காட்பாடி ரயில்வே மேம்பாலம் ஓடுத்தளத்தின் இணைப்புகள் வலுவிழந்துள்ளதால் அதனை சீர் செய்ய ரயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 1 ஆம்  தேதி முதல் பணிகள் தொடங்க  முடிவு செய்தனர். ஆனால் பள்ளி  மாணவர்களின் தேர்வுகளுக்காக வும், சில நிர்வாக காரணங்களுக்கா கவும் அந்தப் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. பாலம் மிகவும் பழுதடைந்துள்ள தால் பொதுமக்களின் நலன் கருதி  வருகிற 1 ஆம் தேதி முதல் அனைத்து வாகனப் போக்குவரத்துக ளையும் நிறுத்தி பாலம் பழுதுபார்க்கும் பணி  தொடங்கப்படுகிறது. இதனால் வேலூரிலிருந்து சித்தூர் செல்லும் அனைத்து வாகனங்களும் வேலூர் - பழைய பேருந்து நிலையம், வி.ஐ.டி,  இ.பி. கூட்டுரோடு, சேர்காடு வழியாக செல்ல வேண்டும். சித்தூரி லிருந்து வேலூர் வரும் வாகனங்கள் இதே வழியை பயன்படுத்தி வரலாம்.  குடியாத்தத்திலிருந்து வேலூர் வரும் பேருந்துகள் காட்பாடி கூட்டு ரோடு, கிறிஸ்டியான்பேட்டை, டெல் வரை செல்லலாம். வேலூரிலிருந்து அரக்கோணம் செல்லும் வாக னங்கள் வேலூர் பழைய பேருந்து  நிலையம், வி.ஐ.டி, இ.பி.கூட்டுரோடு, சேர்க்காடு, வள்ளிமலை,  சோளிங்கர், திருத்தணி செல்ல வேண்டும்.

கிரிஸ்டியா–ன்பேட்டையி லிருந்து சித்தூர் பேருந்து நிலையம் வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ,  இலகுரக வாகனங்கள் (கார்). வள்ளிமலை கூட்டுரோடு, காமராஜபுரம், ரயில்வே நுழைவுப் பாலம், பழைய காட்பாடி வழியாக சித்தூர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். தென் மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலை வழியாக வரும் சரக்கு வாகனங்கள் போளூர், ஆரணி,  ஆற்காடு, ராணிப்பேட்டை சேர்காடு  வழியாக சித்தூர் செல்ல வேண்டும்.  கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக வரும் சரக்குவாகனங்கள் பள்ளி கொண்டா, குடியாத்தம் வழியாக சித்தூர் செல்ல வேண்டும்.  சித்தூரிலிருந்து தமிழ்நாடு வரும் வாகனங்கள் வேலூர் மாவட்ட அனுமதி பெற்ற சரக்கு வாகனங்கள் மட்டும் சேர்காடு வழியாக, இ.பி. கூட்டுரோடு. வி.ஐ.டி. வழியாக செல்லவும். தென்  மாவட்டங் களுக்கு செல்லும் வாகனங்கள் சேர்காடு, ராணிப் பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண் ணாமலை வழியாக செல்ல வேண்டும். சித்தூரிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் குடியாத்தம், பள்ளிகொண்டா வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.