சென்னை மாநகராட்சி, 77வது வட்டம், கே.பி.பார்க் பகுதியில் கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டு பல மாதங்களாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இந்த மைதானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி அண்மையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திங்களன்று (மே 8) எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமனிடம், வாலிபர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், எழும்பூர் பகுதிச் செயலாளர் பார்த்திபன் ஆகியோர் மனு அளித்தனர்.