districts

img

தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி: நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி

சென்னை, டிச. 21- எண்ணூரில் கல்ப் ஆயில் லூப்ரி கண்ட்ஸ் என்ற நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கி றார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிஐடியு சங்கத்தில் இணைந்தனர். பின்னர் அவர்கள் தங்கள்  கோரிக்கைகளை தொழிலாளர் நல ஆணையத்தில் எழுப்பினார்கள். நிர்வாகம் பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு பதிலாக, 11 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது. இதையடுத்து அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சங்க நிர்வாகிகளை அழைத்து  நிர்வாகம் செவ்வாயன்று (டிச. 21)  பேசியது. அதில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களையும் மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டது. பேச்சு வார்த்தையில் சிஐடியு மாவட்டச் செயலா ளர் ஆர்.ஜெயராமன், பொதுத் தொழிலாளர் சங்கத்தின்  செயலாளர் கே.ஆர்.முத்துசாமி, நிர்வாகிகள் அருமைராஜ், பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.