கிருஷ்ணகிரி,ஜன. 14- ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு பேடரப்பள்ளியில் இதுவரை பொங்கல் தொகை மற்றும் பொருள்கள் வழங்காமல் இழுத்தடிப்பதை கண்டித்து பொதுமக்கள் ரேசன் கடை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ரேசன் கடைக்கு சுதா என்ற பெண் ஊழியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 3 ஆண்டு களுக்கு மேலாக அவரின் உறவினர் முனிராஜ் கடையில் அமர்ந்து ரேசன் அட்டை சரிபார்த்தல் மற்றும் பொருள் விநி யோக வேலைகளை செய்து வருகிறார். இந்த பணியில் பல நாட்களாக முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து முனிராஜிடம் கேட்பவர்களை தகாத வார்த்கைகளால் பேசி மிரட்டி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை வரை ரேசன் அட்டைதாரர்கள் பெரும்பாலான வர்களுக்கு பொங்கல் தொகை,பொருள்கள் வழங்கப்படவில்லை. அரசு கொடுக்கும் ரூ1000 பொங்கல் பொருட்கள் வாங்கு வதற்காக தொழிற்சாலைகளுக்கு 2 நாள் விடுப்பு எடுத்து ரூ2000 வரை இழந்து ரேசன் கடையில் காத்துக் கிடந்தும் இன்று வரை வழங்கப்படவில்லை.ரேசன் கடை விடுமுறை என்றால் முன்அறிவிப்பு இல்லை.இது குறித்து மக்கள் கேட்டதற்கு மிரட்டும் தொனியில் பேசிவிட்டு கடையை திறந்தபடியே விட்டு விட்டு சென்று விட்டார். அரசு நியமித்த ஊழியர் சுதாவுக்கு பதிலாக முனிராஜ் ரேசன் கடையில் அமர்ந்து பணி செய்வது, ரேசன் பொருள்களை எடை மிக குறைவாக போடுவது, பல நாட்கள் கடை திறக்கப்படாமல் இருப்பது குறித்து பொதுமக்களும் அப்பகுதி வார்டு உறுப்பினர் ரஜினியும் பலமுறை அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடையில் அதே நிலையில் மக்களோடு சண்டை சச்சரவும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.