districts

img

ராணிப்பேட்டை மாவட்டத்தில்  தீக்கதிர் 105 சந்தாக்கள் வழங்கல்

ராணிப்பேட்டை,ஜூலை17-

      ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்பட்ட தீக்கதிர் சந்தாக்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று (ஜூலை 17) நடைபெற்றது. இதில், ஆண்டு சந்தா 42, அரையாண்டு 58, மாத சந்தா 5 என்று மொத்தமாக 105 சந்தாக்களை மாநிலக் குழு உறுப்பினர் எம். ராம கிருஷ்ணனிடம் வழங்கினர்.

     மாவட்டச் செயலாளர் என். காசிநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. ரகுபதி, எல்.சி.மணி, வட்டார செயலாளர்கள் ஆர். மணிகண்டன் (வாலாஜா), எபிஎம். சீனி வாசன் (அரக்கோணம்), எஸ். கிட்டு (கலவை), எஸ். செல்வம்(ஆற்காடு) ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.