சர்வதேச மகளிர் தினமான புதனன்று (மார்ச் 8) எம்ஜிஆர் நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டம் சார்பில் பேரணி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் மாநில பொருளாளர் வ.பிரமிளா, மாவட்டச் செயலாளர் எம்.சித்ரகலா, எம்.சரஸ்வதி எம்.சி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.