சென்னை,நவ.23- சென்னை, ராஜீவ் காந்தி சாலை, இந்திரா நகர் சந்திப்பில் ரூ.18.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ‘யு’ வடிவ மேம்பாலம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செய லகத்தில் இருந்து (நவ.23) அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை ராஜீவ் காந்தி சாலையில் (ஓஎம்ஆர்), இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பில் அமைந்துள்ள இரண்டு போக்குவரத்து சமிக்ஞை களில் தற்போது வாகனங்கள் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசலும் ஏற்படு கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில், ‘யூ’ வடிவ மேம்பாலங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இந்திரா நகர் மற்றும் டைடல் பார்க் சந்திப்புகளில் ‘யூ’வடிவ மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட ஒருங்கி ணைந்த போக்குவரத்து உள் கட்டமைப்பை மேம்படுத்தும் பணி களுக்காக ரூ.108.13 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்திரா நகர் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள 237 மீட்டர் நீள முள்ள இப்பாலம், 12.5 மீட்டர் நீள முள்ள 19 கண்களை கொண்ட தாகும். ராஜீவ் காந்தி சாலையின் வலது புறத்தில் இந்த பாலத்தின் ஏறு சாய்தளம் 120 மீட்டர் நீளத்துக்கும், இடது புறத்தில் இறங்கு சாய்தளம் 120 மீட்டர் நீளத்துக்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர் எஸ்.பிரபாகர், செயல் இயக்குநர் எம். விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திரா நகர் சந்திப்பு பகுதி யிலிருந்து அமைச்சர் மா. சுப்பிர மணியன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ். அர விந்த் ரமேஷ், கே.கணபதி, ஜெ.எம்.எச். அசன் மவுலானா, ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு. மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.