வேலுர், டிச.15- வேலூர் விஐடியில் ராஜேஸ்வரி விசுவ நாதன் 17வது நினைவு தினத்தையொட்டி ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை வேந்தர் டாக்டர் கோ.விசு வநாதன் தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழி யர்கள் பங்கேற்றனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிக்கு ரத்தம் தானம் வழங்கினர். விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர். சேகர் விசுவநாதன், ரமணி பாலசுந்தரம் (அறங்காவலர் - விஐடி போபால்), துணை வேந்தர் மற்றும் இணை துணை வேந்தர் உடன் உள்ளனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஐடி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் குழுவினர் செய்திருந்தனர்.