districts

img

விழுப்புரம் அருகே ரேசன் அரிசி பதுக்கியவர் கைது

விழுப்புரம்,ஜன.22- விழுப்புரம் அருகே ரேசன் அரிசி பதுக்கிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் அருகே உள்ள வீரமூர் சிவன் கோவில் தெருவில் அருகில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் சிவா தலைமையிலான பறக்கும் படையினர் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தியதினர். சோதனையில் அங்கு 86 சாக்கு மூட்டைகளில் 4,300 கிலொ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.  பிறகு நடத்திய விசாரணையில், விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த முபாரக் அலி, அவரது மகன் சுபீர்அலி மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கதிரேசன் (29) ஆகியோர் ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததும், இவர்கள் 3 பேரும் வீரமூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி அதனை மாவாக்கி வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து கதிரேசனை கைது செய்தனர்.