சென்னை மாநகராட்சி மண்டலம் 2க்குட்பட்ட மணலி மற்றும் சின்னசேக்காடு பகுதிகளில் அண்மையில் பெய்தமழையால் நீர் வடியாமல் சாக்கடையாக மாறி சுற்றுச்சூழலைபாதித்துவருகிறது. துர்நாற்றத்தாலும் கொசுப்பெருக்கத் தாலும் அப்பகுதி மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகிவருகின்றனர். இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் அதிர்ப்தி தெரிவித் துள்ளனர். மெத்தனத்துடன் செயல்படும் மாநகராட்சியை கண்டித்து பகுதி மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித் துள்ளனர். இங்கு வடியாதது மழைநீர் மட்டுமல்ல வேதனையும் தான் ...