districts

img

மாதவரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களை சூழ்ந்த மழை நீர்

சென்னை, டிச. 1- மாதவரம் கோட்டாட்சி யர், வட்டாட்சியர் அலுவ லகங்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களும் ஊழியர்க ளும் வந்துசெல்ல சிரமப்படு கின்றனர். தமிழ்நாட்டில் பெய்து வரும் வட கிழக்கு பருவ மழை காரணமாக தாழ்வான பல இடங்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. மாத வரம் மண்டலம் 3க்கு உட்பட்ட வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவ லகங்கள் புழல் பாலாஜி நகரில் உள்ளது. இங்கு தின சரி பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கின்ற னர். ஆனால் இந்த அலு வலகங்களுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவல கங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. இத னால் பொதுமக்கள் அலுவ லகத்திற்கு வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாதவரம் செங்குன்றம் பகுதிச் செய லாளர் வி.கமலநாதன் கூறு கையில், இந்த அலுவல கத்திற்கு வந்து செல்ல போக்குவரத்து வசதி இல்லை. முறையான பராமரிப்பு இல்லாததால் சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. தற்போது பெய்த மழையில் சாலை கள் சேறும் சகதியுமாக மாறியதோடு, அலுவல கங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ஊழியர்க ளும், பொதுமக்களும் சென்றுவர கடும் அவதிப்படு கின்றனர். எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மழைநீர் வடிகால் அமைத்து தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். இல்லை யென்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.