சென்னை, செப். 2 - குடியிருப்பில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரி வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினரிடம், சீத்தாராம் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் முறையீடு செய்தனர். வேளச்சேரி விஜயநக ரம் அருகே சீத்தாராம் நகர் உள்ளது. வேளச்சேரி - தாம்பரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தப் பகுதியான சாலையை விட 5 அடி உயரத்தில் இருந் தது. சாலை மட்டம் உயர்த்தால், குடியிருப்பு பகுதி 4 அடி தாழ்வானதாக மாறிவிட்டது. இந்த பகுதியில் சேரும் மழை வெள்ளம் இயற்கையாக கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பாதையில் தனியார் பள்ளி கட்டப்பட்டது. இதனால் மழைநீர் செல்வது தடைபட்டது. இதனையடுத்து மழைநீர் கால்வாய் பள்ளத்தில் இருந்து மேடான பகுதியை நோக்கி செல்வதாக அமைக் கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சிறு மழை பெய்தால் கூட சாலையில் சேரும் மழைநீர் குடியிருப் புகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே, குடியிருப்பு பகுதியில் தேங்கும் வெள்ளத்தை, டி.ஏ.வி பள்ளி மைதானம் வழியாக குழாய் பதித்து (இயற்கை யான வழியாக), பெத்தேல் அவென்யு மழைநீர் கால்வா யில் கொண்டு சென்று இணைக்க வேண்டும் என்று குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கோரி வருகின்றனர். இதனை வலியுறுத்தி வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ெஜ.எம்.எச். ஹசன் மவுலானாவை, சீத்தாராம் நகர் குடியிருப் போர் நல சங்கத்தின் செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் சர்வேஸ்வரன், பரமச்சந்திரன் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர். மேலும், விஜயநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை சில்க்ஸ் வரையிலும் உள்ள மழைநீர் கால்வாயை தூர்வாரவும் கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்டு பேசிய ஹசன் மவுலானா, பிரச்சனை களுக்கு தீர்வுகாண தேவை யான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித் தார். இந்நிகழ்வின் போது வேளச்சேரி பகுதி சிபிஎம் மூத்த தலைவர் எஸ்.குமார தாசன் உடனிருந்தார்.