செங்கல்பட்டு, மார்ச் 6- செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெரு மாள் கோவில் ரயில்வே கேட் மீது விழுப்புரத் திலிருந்து தண்டலம் பகுதிக்கு சென்ற லாரி மோதி ரயில்வே கேட் உடைந்து 1 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. விழுப்புரத்திலிருந்து காஞ்சிபுரம் ஒரகடம் அருகே உள்ள தண்டலம் பகுதி யில் இயங்கி வரும் கார் தொழிற்சாலைக்கு உதிரி பாகங்கள் ஏற்றிச்சென்ற லாரி, சிங்க பெருமாள் கோயில் அருகே உள்ள ரயில்வே கேட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில்வேகேட் முறிந்தது. இதனால் திருவள்ளூர்,ஒரகடம், ஶ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் உட்பட இரு சக்கர வாகனங்கள் கூட ரயில்வே கேட்டை கடக்கமுடியாமல் 1மணிநேரத்திற்கும் மேலாக 2கி.மீ தூரத்திற்கு வரிசையாக நின்ற தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறித்த நேரத்திற்கு செல்ல முடிய வில்லையே என வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். அதேபோல 1மணிநேரத்திற்கும் மேலாக அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப் பட்டது. இதனால் ரயில் பயணிகள் நடு வழியில் இறங்கி 2 கிமீ தொலைவிற்கு ரயில்தண்டவாளத்தில் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. சிக்னல் விழாமல் ரயில்சேவை தொடர வாய்ப்பில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலை யில் சென்னை கடற்கரை முதல் செங்கல் பட்டு காஞ்சிபுரம் திருமால்பூர் மற்றும் செங்கல்பட்டில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது இதனை தொடர்ந்து தென் மாவட்டங்க ளில் இருந்து எழும்பூர் வரை செல்லும் புறநகர் ரயில்கள் மற்றும் சென்னை எழும்பூர் முதல் புறநகர் ரயில்களும் ரயில்சேவையும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில் விபத்து குண்டான லாரியை மடக்கி விழுப்புரத்தை சேர்ந்த அந்த லாரி டிரைவரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.