சென்னை: ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றிய பாஜக அரசின் ரயில்வே துறை அமைச்சர் விபத்துக்கள் குறைந்து வருவதாக கூறுவதை, கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 638 விபத்துக்களில் சுமார் 800 பயணிகள் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ள விபரத்தை தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல் மறுக்கிறது. இதுதொடர்பாக உயர்மட்டக் குழுக்கள் அளித்த பரிந்துரைகளை ஒன்றிய அரசு அக்கறையுடன் செயல்படுத்த முன் வர வேண்டும். ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்து, சேவைகளை மேம் படுத்துவதில் அலட்சியம் காட்டுவதை கைவிட்டு, ஒன்றிய பாஜக அரசும், ரயில்வே அமைச்சகமும் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.” என்று வலி யுறுத்தியுள்ளார்.