districts

img

சாவர்க்கரின் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்ததில் உள்நோக்கம்

புதுச்சேரி,மே.28- நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழா ஜனநாயகத்திற்கு எதிராக நடைபெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார். புதுச்சேரியில்ஞாயிறன்று (மே 28)  செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:- புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா ஜனநாயகத்திற்கு எதிராக  நடைபெறுவதால், விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று  அறிவித்தது. அது மட்டும் இல்லாமல்  மகாத்மா காந்தியை கொன்ற கோட் சேவுடன் சேர்த்து 7 வது குற்ற வாளியாக அறிவிக்கப்பட்ட சாவர்க்க ரின் பிறந்த நாளில் திறப்பது உள் நோக்கம் கொண்டது.  தமிழகத்தின் அடையாளம் என்று கூறி செங்கோலை வைத்து பாஜக அரசியல் நாடகம் ஆடி வருகிறது. சுதந்திரத்திற்கும்,அதிகார பரிமாற்றத்திற்கும் இது சம்பந்த மில்லாதது.   புதுச்சேரியில் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில்   கடந்த ஆண்டைவிட  அரசு பள்ளி மாணவர்க ளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதற்கு புதுச்சேரி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். அரசு பள்ளி களில் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத் தாததே  தேர்ச்சி விகிதம் குறைவுக்கு காரணம்.இதற்கு பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு முழு பொறு ப்பேற்க வேண்டும்.

வெற்று அறிவிப்புகள்

மார்ச் மாதம் நடைபெற்ற புதுச்சேரி  சட்டமன்ற கூட்ட தொடரில்  ரேஷன் கடைகளை திறப்போம்.  பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்,  சமையல் எரிவாயுக்கு மானி யம் வழங்கப்படும் என்றெல்லாம் அறி விப்புகளை என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புகள் அறிவிப்புக ளாகவே தற்போது வரை உள்ளது.

கொள்முதல் நிலையங்கள்

 டெல்டா மாவட்டமான காரைக் காலில் விவசாயிகளிடமிருந்து சம்பா நெற் பயிர்களை  கொள்முதல் செய்ய  எந்தவித வழியையும் புதுச்சேரி அரசு ஏற்படுத்தவில்லை. அண்டை மாநில மான தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்த ப்பட்டுள்ளது. ஏன்  காரைக்காலில் மட்டும் கொள்முதல்  நிலையங்களை புதுச்சேரி அரசு ஏன் அமைத்து தர வில்லை என்று கேள்வி எழுப்பினார்.  தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய மருத்துவ கவுன்சில், புதுச்சேரி  அரசு மருத்து வக்கல்லூரி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு அனுமதி மறுத்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்   கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இது தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஊக்குவிக்கும் செயல். அரசு கல்லூரி களில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் அதனை சரிசெய்து இந்தாண்டே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். செய்தியாளர் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் மற்றும் மூத்த தலை வர்கள்  சுதா சுந்தரராமன், பெருமாள், ராமச்சந்திரன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.