சென்னை, ஆக். 12-
வியாசர்பாடி புதுநகர் திட்டப்பகுதியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய குடியிருப்பு வாசிகளுக்கு கிரயப் பத்திரம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நிர்வாக பொறியாளர் பானுமதியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை வியாசர்பாடி புதுநகர் திட்டப்பகுதியில் தங்களது வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளில் வீடுகட்டி 300க்கும் மேற்பட்ட குடும் பங்கள் கடந்த 30 ஆண்டுக ளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர் ஒதுக்கீடு பெற்ற ஒவ்வொருவரும் ஒதுக்கீடு பெற்றதற்கான முன் வைப்புத்தொகை மற்றும் முதல் தவணை தொகையாக ரூ.320 செலுத்தியுள்ளனர்.
இவர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலு வைத்தொகை ஏதேனும் இருப்பின் அதை செலுத் தத் தயாராக உள்ளனர். எனவே, அந்த மக்களின் ஒவ்வொரு விண்ணப்பங் களையும் ஆய்வு செய்து உடனடியாக கிரய பத்திரம் வழங்க வேண்டும்.
அதேபோல் வாரியத் தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒதுக்கீடுதாரர்களிடமிருந்து பலர் பணம் கொடுத்து அந்த இடத்தை வாங்கி யுள்ளனர். பணம் கொடுத்து வாங்கியதற்கான கிரய ஆவணங்களையம் அவர்கள் வைத்துள்ளனர்.
எனவே அவர்களுக்கு சிறப்பு திட்டத்தின்படி அர சாணை உருவாக்கி, வாங்கி யவர் பெயரில், பெயர் மாற்றம் செய்து கிரயப் பத்திரம் வழங்க வேண்டு மென அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட நிர்வாக பொறி யாளர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உடனடியாக ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரயப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றார். ஒதுக்கீடு தாரர்களிடம் இருந்து வாங்கியவர்க ளுக்கு பெயர் மாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம் கூறுகை யில், தற்போது கிரயப் பத்திரம் வழங்க ரூ1 லட்சம் வரை கேட்பதாக மக்கள் கூறுகின்றனர். எனவே ஒதுக்கீடு பெற்றவர்களிடம் எந்த பணமும் பெறாமல் உடனடியாக கிரயப் பத்திரம் வழங்க வேண்டும். அதே போல் ஒதுக்கீடு செய்யப் பட்டவர்களிடம் இருந்து நிலத்தையோ, வீட்டையோ வாங்கியவர்களுக்கு அரசு புதிய அரசாணை வெளி யிட்டு அவர்களுக்கும் கிரயப் பத்திரம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதில் பெரம்பூர் பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், பகுதிக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.வெற்றிராஜன், சி.அரி, பி.சேகர், கிளைச் செயலாளர் நைனா முகம் மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.