districts

சென்னை முக்கிய செய்திகள்

மின்வாரியத்தில் பணம் கையாடல்  செய்த 2 பேருக்கு தண்டனை

பூவிருந்தவல்லி,டிச.22-  மின்வாரியத்தில் ரூ28.51 லட்சம் பணத்தை கையாடல் செய்த 2 ஊழியர் களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை, கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை யன்று  பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி உறுதி செய்து தீர்ப்பளித்தார். மேலும், அவர்களின் 24 மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தமிழ்நாடு மின்சார வாரியத்தின்  சென்னை வளசரவாக்கம் அலுவலகத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மின் கணக் கீட்டு ஆய்வாளராக கணபதி (48), மின் கணக்கீட்டு ஆய்வாளராக சிவப்பிரகாசம் (48), வருவாய் மேற்பார்வையாளராக சாகுல் ஹமீது (51) ஆகிய 3 பேரும் வேலைபார்த்து வந்துள்ளனர். இந்த 3 பேரும் கடந்த 2003ம்  ஆண்டு மின் நுகர்வேரிடமிருந்து தமிழ்நாடு மின்வாரியத்துக்கு பெறப்பட்ட 28 லட்சத்து 50 ஆயிரத்து 800 ரூபாயை கையாடல் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசில் நம்பிக்கை மோசடி, ஆவண தடுப்பு பிரிவில் உதவி செயற்பொறியாளர் நடராஜன் புகார் அளித்துள்ளார். இப்புகா ரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணமோசடியில் ஈடுபட்ட சிவப்பிரகாசம், சாகுல்ஹமீது, கணபதி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை கடந்த 20 ஆண்டு களாக பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதி மன்றம் 1ல் நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு கணபதிக்கு ஓராண்டு சிறை, ரூ.12 ஆயிரம் அபராதமும், சாகுல் ஹமீதுக்கு ஓராண்டு சிறை, ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு விசாரணை காலத்தில் சிவப்பிரகாசம் இறந்து விட்டார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளி களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, பூந்தமல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதி மன்றம் 2ல் இதுவரை 24 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலை யில், சனிக்கிழமை இந்த மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணை முடிந்தது. இவ்வழ க்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.பி.புரட்சிதாசன் ஆஜராகி வாதாடினார்.  இதைத் தொடர்ந்து,  24 மேல்முறையீட்டு மனுக்க ளையும் நீதிபதி சி.விஜயகுமார் தள்ளுபடி செய்தார்.

வணிகர்களிடம் நூதன முறையில்  பணம் பறிக்கும் கும்பல் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

திருவள்ளூர், டிச. 22- திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக வணி கர்களை குறி வைத்து, மோசடியாக பணம் பறிக்கும் கும்பல் ஒன்று நடமாடி வருகிறது. குறிப்பாக உணவகங்கள், குளிர்பான கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் உணவுப்பொருட்களை பார்சல் வாங்கிச் சென்று விட்டு, சிறிது நேரத்தில் வாங்கிய உணவுப் பொருளின் ஒரு பகுதியைக் கொண்டு வந்து அதில் புழு, அல்லது கரப்பான் பூச்சி போன்றவை இருந்த தாகவும் அதனை சாப்பிட்ட நபருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து கடையை இழுத்து மூட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படு கிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவர் பொன்னேரி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் கேக், சம்சா உள்ளிட்ட திண்பண்டங்களை பார்சல் வாங்கிக் கொண்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த பேக்கரிக்கு தான் வாங்கி சென்ற சம்சாவில் பூச்சி இருந்ததாகவும் அதனை சாப்பிட்ட தனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகராறில் ஈடு பட்டுள்ளார். மேலும்  தனது கூட்டாளிகள் சிலரை கைப்பேசி மூலம் வரவழைத்து கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்து பயந்து போன அந்த பேக்கரியின் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அந்த கும்பல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று மேலும் இரண்டு பேக்கரிகளிலும் அந்த கும்பல் தனது கைவரிசையை காட்டியுள்ளதாக கூறுகின்றனர். மேலும் அந்த கும்பல் தங்களுக்கு அரசியல் பின்புலமும், காவல்துறை உயர் அதிகாரிகளின் நேரடி தொடர்பு இருப்ப தாகவும் கூறி வருவதால் பாதிக்கப்படும் வணிகர்கள் புகார் அளிக்க தயங்குகின்றனர், இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வணிகர்கள் எந்த நேரத்தில் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் கடைக்கு வருவார்களோ என்ற அச்சத்துடனே வியா பாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். வணிகர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் தாமாக முன்வந்து மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயானத்தில் கழிவுநீர்  திறந்துவிடும் அவலம்

வண்டலூர், டிச.22- வண்டலூரை அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் நெடுங்குன்றம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், கொளப்பாக்கம், அண்ணா நகர், மப்பேடுபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் மயானம் உள்ளது. கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து டிராக்டர் மற்றும் லாரிகளில் சேகரிக்கப்படும் கழிவு நீர் முழுவதும் இந்த சுடுகாட்டு பகுதி மற்றும் சுடுகாட்டை ஒட்டி உள்ள சுற்று சுவர் ஓரத்தில் ஊற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியிலும் கழிவு நீரின் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். நிலத்தடி தண்ணீரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவு நீர் ஊற்றப்படுவதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்தொற்று பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. அப்பகுதி மக்கள் கழிவு நீரை ஊற்ற வரும் டிராக்டர், லாரி டிரைவர்களை கண்டித்தால் மிரட்டும் வகையில் பேசுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தொடர்ந்து கழிவுநீரை ஊற்றி வருகிறார்கள். எனவே கழிவு நீரை மயானப்பகுதியில் ஊற்றுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 சாலைத் தடுப்பில் பைக் மோதி   ஐடி ஊழியர்கள் 2 பேர் பலி

சென்னை, டிச. 22- சாலை தடுப்பில் பைக் மோதிய விபத்தில் சென்னை  ஐடி ஊழியர்கள் 2 பேர், சம்பவ இடத்திலேயே பலியா னார்கள். சென்னை, பெருங்குடியில் தனியார் ஐடி நிறுவனத் தில் பணிபுரியும் நண்பர்களான கேரளத்தைச் சேர்ந்த  விஷ்ணு (24), பம்மலைச் சேர்ந்த கோகுல் (24) இருவரும் அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் பள்ளிகரணை அருகே அதிவேகமாகச் சென்றுள்ளனர். இந்த நிலை யில், ஆதிபுரிஸ்வரர் கோயில் அருகே சென்றபோது, நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த பள்ளி கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை யினர் இருவரது உடல்களையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மெட்ரோ ரயில் பணியால்  வீட்டுக்குள்  திடீர் பள்ளம்

சென்னை,டிச.22- சென்னை தி.நகரில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது தி.நகர் லாலா தோட்டம் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் தரைப் பகுதி திடீரென்று மண்ணில் புதைந்தது. இதனால் வீட்டு க்குள் பள்ளம் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் மெட்ரோ ரயில் அதிகாரி கள் அங்கு சென்று ஆய்வுசெய்தனர்.  பின்னர் கான்கிரீட் கலவையை கொட்டி அந்த வீட்டில் ஏற்பட்ட பள்ளத்தை  மெட்ரோ ரயில் ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட னர்.