புதுச்சேரி டிச. 22- புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய மாணவர் சங்கத் பிரதிநிதிகள் சிபிஎம் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாண வர் பேரவை தேர்தலில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அனைத்து பொறுப்புகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற இந்திய மாணவர் சங்க பிரதிநிதிகள், ரெட்டியார் பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜாங்கம், வெ.பெருமாள், பிரபுராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆனந்த், சஞ்சய் சேகரன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது இந்திய மாணவர் சங்க புதுச்சேரி தலைவர் ஜெய பிரகாஷ், செயலாளர் பிரவீன் குமார் நிர்வாகி கள் வந்தனா, நிலவழகன், அரசன் ஆகி யோர் உடனிருந்தனர். முன்னதாக, மாண வர் சங்க பிரதிநிதிகளை வரவேற்று மாலை அணிவித்து வாழ்த்தினர்.