districts

img

புதுவை தியாகிகள் தினம்: சிஐடியு மலரஞ்சலி

புதுச்சேரி, ஜூலை 30- எட்டு மணி நேர வேலை உரிமை கேட்டு புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு ஆட்சியை எதிர்த்து 1936 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி போராடிய சுதேசி பஞ்சாலை தொழிலாளர்கள் 12 பேர்களை, பிரெஞ்சு ராணுவம் சுட்டுக் கொன்றது. அந்த தொழிலாளர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 அன்று தியாகிகள் தினமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.  புதுச்சேரி கடலூர் சாலையில் அமைந்துள்ள தியாகிகள் சிலைக்கு சிஐ டியு புதுச்சேரி மாநில குழு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாநிலத் தலைவர் பிரபுராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் வெ. பெருமாள், கொளஞ்சியப்பன் கலியமூர்த்தி, சத்தியா, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் பி.பெருமாள், சிஐடியு மாநில செயலாளர் சீனுவாசன், மூத்தத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், குண சேகரன் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மறைமலை அடிகள் சாலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதேபோல் பல்வேறு தொழிற்சங்கங்கள் சேர்ந்தவர்கள் பங்கேற்று தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.