districts

img

பார்வை மாற்றுத்திறனாளிக்கு நூல்கள் வெளியீடு

செங்கல்பட்டு, ஜன. 17 - கொரோனா தொற்றிலிருந்து பாது காத்துக் கொள்ள பார்வை மாற்றுத்திறனாளி களுக்கென பிரெயில்லே நூல்களை வெளி யிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங் குளத்தூரில் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், பார்வை மாற்றுத்திறனாளிகள் கோவிட்19 தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான விழிப்புணர்வு, ஆரோக்கியம் சார்ந்த சிஎஸ்ஆர் புல்லட்டின் என்கிற இரண்டு நூல்களை பிரெயில்லே முறை யில் தயாரித்துள்ளது. ‘வள்ளி’ என பெய ரிடப்பட்ட இந்த நூல்களின் தமிழப் பதிப்பினை, பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் விவேக் குழுவினர் உருவாக்கி உள்ளனர். இந்த நூல்களின் வெளியீட்டு விழா ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. புதிய தலைமுறை அறக்கட்டளை, எஸ்ஆர்எம் பல் மருத்துவ கல்லூரி தேசிய பார்வை இல்லாதவர்களுக்கான சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்வுக்கு அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி.முத்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மருத்துவ ஆராய்ச்சி மைய இணை துணை வேந்தர் லெப்டினெண்ட் கர்னல் டாக்டர் ஏ.ரவிக்குமார் வரவேற்றார். செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் பரணிதரன் நூல்களை வெளியிட்டு பேசினார். புதிய தலைமுறை அறக்கட்டளை செயலாளர் முனைவர் டி.வி.வெங்கடகிரி நன்றி கூறினார்.